தொகுப்பு

Archive for the ‘மழை’ Category

மாலைச் சூரியனே…

பெப்ரவரி 26, 2008 ச.தனா மறுமொழியவும்

sunset

மாலைச் சூரியனே…

சென்று வா, இரவை வென்று வா!!!

நீ வெல்லும் போது,

எங்கள் பொழுது விடியும்!

சில சமயம் நீ தோற்கும் போது,

உன்னை மறைக்கும் அந்த

மழை மேகம் கூட கண்ணீர்விடும்!

மழையின் சங்கீதம்

செப்டம்பர் 12, 2007 ச.தனா 1 comment

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை