தொகுப்பு

Archive for the ‘புலம்பல்’ Category

தப்பு செய்

right-wrong 

தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!

தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே

தப்பா செஞ்சா தான் தப்பு!!!!

இந்த காலத்துல,

தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.

தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.

தப்பே செய்யாதவன்  மனுசனே இல்ல.

அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.

பொய்யில் உண்மை – உண்மையில் பொய்

பொய்

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.

உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.

இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்

60 வயதிலும் அடிமை!!!

அக்டோபர் 4, 2007 ச.தனா மறுமொழியவும்

Gandhi

அண்று -
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.

-

இன்று -
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!

-

அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!

நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!

இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!

முற்றுப்புள்ளி

அக்டோபர் 4, 2007 ச.தனா மறுமொழியவும்

sentence

வாழ்க்கை என்னும் வாக்கியத்தில்

நான் மட்டும் தனியாய்!!!

ஒரே புள்ளியாய்!!! முற்றுப்புள்ளியாய்.

.

குடும்பம், நட்பு, சமூகம் …

என்று பல புள்ளிகள் வந்து சேர்ந்தன

வார்த்தைகள் இல்லா வாக்கியமானது

என் வாழ்க்கை… …………………..

மகிழ்ச்சியுடன்…………………..

தமிழில் பேச…

செப்டம்பர் 22, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

tamil words

தமிழ் வார்த்தைகள் மட்டும் USE செய்து

தமிழில் பேசுவது – பழைய தமிழ் (பழந்தமிழ்)

இந்த கால பென்களைப் போல MODERN ஆக

தமிங்கலத்தில் பேசுவது – இன்றய தமிழ்!!!

ஹ்ஹ்ம்……………………….. இது

தமிழின் வளர்ச்சியா ?

தமிழரின் வளர்ச்சியா ?

தனிமையின் கொடுமை

செப்டம்பர் 19, 2007 ச.தனா 1 மறுமொழி

alone

நான் எழுதிய கவிதைகளை

ஒவ்வொன்றாய், நானே

படித்து மகிழ்கின்றேன்.

இது தனிமையின் கொடுமையா ?

இல்லை என் கவிதையின் அருமையா ?

திரும்பி வருவாயா ?

செப்டம்பர் 9, 2007 ச.தனா மறுமொழியவும்

bird

இரைத் தேடி கூட்டை பிறிந்து சென்ற

தாய்ப் பறவை போல்

பணம் பதவியைத் தேடி எங்களைப் பிறிந்த நன்பா

இரை கிடைத்ததும் அந்த தாய்ப் பறவை போல

திரும்பி வருவாயா ?

எங்களோடு நட்பு பாராட்ட!!!

சுயனலம்

செப்டம்பர் 8, 2007 ச.தனா 1 மறுமொழி

selfish

என் நலம் பாத்து

நம் நலம் சேர்த்து

நான் செய்தது

சுயனலம் ஆகுமா?

அது பொது நலம் இல்லா விட்டாலும்

பொதுவான நலம் அல்லவா?

ஆண்டவன் பொல்லாதவன்

செப்டம்பர் 6, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

(

அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)

என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,

உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?

என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.

வாழ்க்கைப் பாடம்

lesson

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்

நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்

Read more…