கொடுப்பதும் கெடுப்பதும்
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.
இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,
நாமோ அந்த வீட்டையே
துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.
உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.
இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்

என் நலம் பாத்து
நம் நலம் சேர்த்து
நான் செய்தது
சுயனலம் ஆகுமா?
அது பொது நலம் இல்லா விட்டாலும்
பொதுவான நலம் அல்லவா?

காதலின் தேடல் இளமையில்…
அன்பின் தேடல் முதுமையில்…
வாழ்கையின் தேடல் எளிமையில்…
பதவியின் தேடல் தலைமையில்…
இன்பத்தின் தேடல் பன்மையில்…
துன்பத்தின் தேடல் பொருமையில்…
சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…
கோபத்தின் தேடல் வன்மையில்…
வெற்றியின் தேடல் வலிமையில்…
தோல்வியின் தேடல் வெறுமையில்…
உண்மையின் தேடல் பொய்மையில்…
பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது

சுதந்திரம் என்பது ஒற்றுமை உணற்வு
- பறிக்கப்படும் வரை!!!
இளமையில் பசித்திருப்பது
முதுமையில் தனித்திருப்பது
……………
……………
காதலித்தும் சொல்லாமல் தவித்திருப்பது
அண்மைய மறுமொழிகள்