முகப்பு > அழகு, இயற்கை, உணர்ச்சி, மழை > மழையின் சங்கீதம்

மழையின் சங்கீதம்

செப்டம்பர் 12, 2007 ச.தனா மறுமொழியவும் Go to comments

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை

  1. xcosettex
    11:12 பிற்பகல் இல் செப்டம்பர் 12, 2007 | #1

    This is beautiful.

  1. No trackbacks yet.