அந்த ஆண்டவனும் ஊனம் தான்

என் பிராத்தனைகளை அவன் கேட்பதை,
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், காது கேளாதவன்.
என் கேள்விகளுகெல்லாம் அவன்
அமைதியாய் சொல்லும் பதில்களை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.
என் செயல்களில் உள்ள நல்ல வற்றை
அவன் பார்ப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், பார்வை அற்றவன்.
என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க
ஒவ்வொறு முறையும் அவன் கைகோடுப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.
என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்
என்னுடன் அவன் நடப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.
நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊணமாகிவிடுகிறான்!!!
நம் ஊணமுற்ற நண்பர்களின் கெதி?
ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!
கொடுப்பதும் கெடுப்பதும்
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி
புதிய கருத்துகள் பரிமாறி
புதிதாய் கொண்டாடுவோம் இந்த
புத்தாண்டை
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
கண்ணீர்

உண் மனதில் உள்ள
இரணங்கள் எல்லாம்
முத்துக்கள் ஆனதோ!
உண் கண்களில்!!!
தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை இல்லாமல்
பயத்துடன் வாழும் வாழ்க்கையும்,
உயிருடன் கல்லறையில்
உறங்குவதும், ஒன்றே!!!
பூ வின் மீது நீர்த்துளி

பூ வின் மீது நீர்த்துளி
இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?
இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!
இந்த நீர்த்துளி கொண்ட பூ!
மாலைச் சூரியனே…

மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
எது கடினம்?
கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …
அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …
இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …
இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …
இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …
எது கடினம்?

மதுவும் மாதுவும்
மது மாது,
இவை இரண்டையும்,
தொடாதவன் வாழ்க்கை கேலி!
தொட்டவன் வாழ்க்கையில்
மற்றதெல்லாம் போலி!!!






அண்மைய மறுமொழிகள்