
பூ வின் மீது நீர்த்துளி
இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?
இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!
இந்த நீர்த்துளி கொண்ட பூ!

பூ வின் மீது நீர்த்துளி
இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?
இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!
இந்த நீர்த்துளி கொண்ட பூ!
→ No Commentsபகுப்புகள்: Uncategorized

மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
→ No Commentsபகுப்புகள்: இயற்கை · கருத்து · மழை
கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …
அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …
இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …
இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …
இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …
எது கடினம்?

→ No Commentsபகுப்புகள்: எதார்த்தம் · கேள்வி
மது மாது,
இவை இரண்டையும்,
தொடாதவன் வாழ்க்கை கேலி!
தொட்டவன் வாழ்க்கையில்
மற்றதெல்லாம் போலி!!!
→ No Commentsபகுப்புகள்: உண்மை · மொக்கை
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
→ No Commentsபகுப்புகள்: உண்மை · தத்துவம் · வாழ்க்கை
முழு நிலவின் இளமை,
அது தேய்வதில் தான்.
நம் மனதின் இளமை,
நாம் தாழ்வதில் தான்!!!
→ No Commentsபகுப்புகள்: அழகு · இடம் · இளமை · கருத்து

பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு - நம் மனசாட்சி.
இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,
நாமோ அந்த வீட்டையே
துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!
→ 3 Commentsபகுப்புகள்: உண்மை · தத்துவம் · வாழ்க்கை
(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
→ No Commentsபகுப்புகள்: உணர்ச்சி · எதார்த்தம் · காதல்
அன்பிற்க்கு பஞ்சமில்லை,
உயிர் நட்பிற்க்கு வஞ்சமில்லை.
பகைமைக்கு நெஞ்சமில்லை,
இந்த புத்தாண்டிலோ அதற்க்கு தஞ்சமில்லை!!!
பகைமையில்லா உலகம் காண்போம் இந்த புத்தாண்டில்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
→ 1 Commentபகுப்புகள்: கருத்து · வாழ்த்து